அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் TNTJவின் மனிதநேயப் பணி - விமான டிக்கெட் உதவித் தொகை

வூதி அரேபியா ரியாதிற்கு லேபர் வேலைக்காக, 50 வயது மதிக்கத்தக்க, இராம்நாடு மாவட்டம் கமுதி தாலுக்கா பெருநாழியைச் சேர்ந்த சகோ. E.P. முஹம்மது இக்பால் என்பவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்னதாக வந்திருந்தார்.  ஆனால், மிகக்குறைவான சம்பளத்திற்கு கடுமையான வேலையில் ஈடுபடுத்தியும், சம்பளம் சரியாக தராமலும், முறையான தங்குமிட வசதி தராமலும் அவர் பணிக்கு வந்த நிறுவனத்தில் கடுமையான சிரமத்திற்கு உள்ளானார்.

இறுதியாக, சொந்த செலவில் இந்தியாவிற்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்தால், இந்தியா அனுப்புவேன் என நிறுவனம் வாக்களித்ததின் அடிப்படையில், தாயகத்திற்கு செல்ல உதவி செய்யுமாறு ரியாத் மண்டலத்தை பாதிக்கப்பட்ட சகோதரர் அணுகினார்.  இந்நிலையில், கருணை உள்ளம் கொண்ட ரியாத் மண்டல சகோதரர்கள் உடனடியாக உதவி அளித்ததின் பேரில், அவருக்கு ரூ.9000 மதிப்பிலான சென்னை செல்லத்தக்க ஏர் இந்தியா டிக்கெட் எடுத்து தரப்பட்டது.  இந்த டிக்கட்டை மண்டல துணைச் செயலாளர் சகோ. அரசூர் ஃபாரூக் அவர்கள் ரியாத் மண்டலம் சார்பாக பாதிக்கப்பட்ட சகோதரருக்கு வழங்கினார். கடந்த 12.08.2011 வெள்ளியன்று மாலை 5 மணி விமானத்தில் அவர் சென்னை திரும்பினார்.

அல்ஹம்துலில்லாஹ்...

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.