தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலத்தின் ரவ்தா கிளையில் கடந்த 26.08.2011 வெள்ளி அன்று பயான் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி கிளைத் தலைவர் சகோ.சலாஹுதீன் தலைமையிலும், மண்டல நிர்வாகிகள் சகோ. நூருல் அமீன், சகோ. சிட்டி பஷீர் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மண்டலப் பேச்சாளர் சகோ. கடையநல்லூர் அஹமது கபீர் மெளலவி, “அத் தஃவ்பா [பாவமன்னிப்பு]” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். நிகழ்த்தப்பட்ட உரையிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு மதிப்புமிக்க பரிசுகள் கொடுக்கப்பட்டன. 100 நபர்களுக்கு மேல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இப்ஃதார் சிறப்பு ஏற்படுகள் செய்யப்ட்டிருந்தன.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
இஃப்தார் நிகழ்ச்சி
கிளை நிகழ்ச்சி
ரமளான்
ரவ்தா கிளை
ரியாத் - ரவ்தா கிளை பயான் & இஃப்தார் நிகழ்ச்சி 26-08-2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment