அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

ரியாத் - நியூ செனைய்யா கிளை பயான் & இஃப்தார் நிகழ்ச்சி

மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் சார்பாக 18.08.2011 அன்று ரியாத் மண்டலத்தின் பெரிய கிளைகளுள் ஒன்றான நியூ செனைய்யா கிளையில், GGC வில்லாவில் இஃப்தார் நேர பயான் நிகழ்ச்சி, கிளைத் தலைவர் நூர் (எ) முஹம்மது ஹனிஃபா தலைமையிலும், மண்டல நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மண்டலப் பேச்சாளர் சகோ: அப்துல்லாஹ் மவ்லவி “ரமலானில் தேட வேண்டியவைகள்”  என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்தினார்.  உரையில் இருந்து ஐந்து கேள்விகள் கேட்கப்பட்டு நிறைவான பரிசுகள் தரப்பட்டன. இந்நிகழ்ச்சியில் 220 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டனர்.     நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் இஃப்தார் வழங்கப்பட்டது.

கிளை நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தனர். நியூ செனைய்யா ஃபார்கோ கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.





ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.