ரியாத் மண்டலத்தின் மலஸ் கிளையின் பயான் நிகழ்ச்சி மற்றும் இஃப்தார் கடந்த 13.08.2011 சனிக்கிழமையன்று மலஸ் ஜரீர் பகுதியில் நடைபெற்றது. மலஸ் கிளைத் தலைவர் சகோ. ஹாஜா அவர்களின் தலைமையிலும், மண்டல நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மலஸ் கிளைச் செயலாளர் சகோ. முபாரக் அவர்கள் துவக்க உரையாற்றினார். சிறப்புரையாக “இஸ்லாத்தில் உறுதி” என்ற தலைப்பில் மண்டலப் பேச்சாளர் சகோ. அப்துல்லாஹ் மவுலவி அவர்கள் உரையாற்றினார். நிகழ்ச்சியின் இறுதியில், ஃபித்ரா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்த்தப்பட்ட உரையிலிருந்து கேள்விகள் கேட்டு பரிசுகள் தரப்பட்டன. மஃக்ரிபுக்கு பின்னர் இஃப்தார் விருந்து நடைபெற்றது. சித்தீன், ஜரீர் கிளை சகோதரர்கள் உட்பட 100 பேர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
இஃப்தார் நிகழ்ச்சி
கிளை நிகழ்ச்சி
மலஸ் கிளை
ரியாத் - மலஸ் கிளை பயான் & இஃப்தார் நிகழ்ச்சி
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment