அன்பு சகோதர, சகோதரிகளுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும்!
ரமலானில் எந்த காரியத்தை செய்தாலும் அதற்காக அல்லாஹ் நாடினால் நமக்கு ஏழு முதல் எழுநூறு மடங்கு நன்மைகளை தருவான். எனவே இந்த ரமலானில் நாம் உம்ரா செய்ய முயற்சிப்போம்.
'ரமலானில் செய்யப்படும் ஓர் உம்ரா ஹஜ்ஜுக்கு நிகரானதாகும், அல்லது என்னோடு ஹஜ் செய்வதற்கு நிகரானதாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: புகாரி 1782, 1863. முஸ்லிம் 2408, 2409)
எனவே ஹஜ் செய்த நன்மையை பெற உடனடியாக முயற்சிப்போம். நாம் நமது உம்ராவை இறையச்சத்துடன் செய்தாலும் நபிகளார் கற்றுத்தந்த வழிமுறைகளை கடைபிடித்தால் மட்டுமே அது அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படும். எனவே இத்துடன் இணைக்கப்பட்டுள்ள இணைப்பை வாசித்து உம்ரா வழிமுறைகளை அறிந்து கொள்ளுங்கள். தங்களுடைய உம்ராவில் எங்களுக்காவும் பிரார்த்தனை செய்யுங்கள்.
குறிப்பு: ‘உம்ரா செய்யும் முறை' என்ற இணைப்பு துண்டு பிரசுரமாக இருப்பதால் கையில் எடுத்து செல்ல வசதியாக இருக்கும். ‘டவுன்லோட்' செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும்.
No comments:
Post a Comment