ரியாதிலிருந்து சுமார் 100 கிமீ தொலைவில் உள்ள ரியாத்
மண்டலத்தின் புறநகர் கிளையான அல்கர்ஜ் சஹானா கிளையின் மார்க்க விளக்க பயான்
நிகழ்ச்சி, சஹானா பகுதியில் கடந்த 09.12.2011 வெள்ளியன்று நடைபெற்றது. கிளைத்
தலைவர் சகோ. வழுத்தூர் அன்சாரி தலைமையிலும், மண்டல தணிக்கையாளர் சகோ. ஷேக் அப்துல்
காதர், மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மண்டல
தலைவர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள் “கற்றலும் மார்க்கக் கடமையே” என்ற தலைப்பில் உலகக்
கல்வி-மார்க்க கல்வி குறித்தும், பயனுள்ள கல்வி-பயனற்ற கல்வி குறித்தும் சிறப்புரை
நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment