ரியாத் மண்டலத்திலுள்ள கதீம் செனைய்யா கிளையில் 22-12-2011 அன்று மாதாந்திர மார்க்க
சொற்பொழிவு நடைபெற்றது. இஷா தொழுகைக்கு பின் நடந்த இக்கூட்டத்தில் மண்டல பேச்சாளர்
சகோ. இக்பால் மௌலவி அவர்கள் சிறப்புரையாற்றினார். அதை தொடர்ந்து சகோதரர்களின் மார்க்க சநதேகங்களுக்கும் பதிலளித்தார்.
அடுத்ததாக மண்டல மற்றும் தலைமை செய்திகளை எடுத்துரைத்த சகோ.முஹம்மது மாஹீன், இரத்ததானத்தில் நமது ஜமாஅத் தமிழகத்தில்
முதலிடத்தில் இருப்பதையும் வெளிநாடுகளில் உள்ள தவ்ஹீத் ஜமாஅத்தில் ரியாத் மண்டலம் முதலிடத்தில்
இருப்பதையும் தெரிவித்தார். இறுதியாக கிளை செய்திகளை சகோ.நவ்ஷாத் அவர்கள் அறிவிக்க
கூட்டம் நிறைவு பெற்றது. வெளிநாட்டு கிளைகளில் கதீம் செனைய்யா கிளை முதலிடத்தில் இருப்பது
குறிப்பிடத் தக்கது.
No comments:
Post a Comment