வெளிநாட்டு
மண்டலங்களுக்காக வழங்கப்பட்ட அனைத்து விருதுகளிலும் முதலிடம் பெற்ற
ரியாத் மண்டலத்தின் தொடர்ச்சியான தஃவா பணிகளின் அடுத்த கட்டமாக, அனைத்து கிளை
நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மண்டல
நிர்வாகிகளுக்கான மண்டல தர்பியா நிகழ்ச்சி கடந்த 16.12.2011
வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி அளவில் ரியாத் மண்டல
மர்கஸில் சிறப்பாக நடைபெற்றது.
மாநிலப்
பொதுக்குழு குறித்த விபரங்களை அளித்து, மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல்
நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். 3 கட்டங்களாக பிரிக்கப்பட்டு தர்பியா நடைபெற்றது
முதல் கட்டமாக
மண்டல பேச்சாளர் சகோ. சோழபுரம் அன்சாரி அவர்கள், "நிர்வாகிகளின் ஒழுங்குகள்" என்ற தலைப்பில், நிர்வாகிகள் பேண
வேண்டிய அணுகுமுறைகள், பெற வேண்டிய படிப்பினைகள், ஒழுக வேண்டிய
பண்புகள் முதலியவற்றை சிறப்பாக குர்ஆன் - ஹதீஸ் ஒளியில் விளக்கிப் பேசினார்.
அடுத்த கட்டமாக, மண்டலத் தலைவர்
சகோ. ஃபெய்ஸல் அவர்கள், கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட்டின்
பயன்பாடுகளை விளக்கி, தஃவா பணிகளுக்கு அவற்றை பயன்படுத்தும்
விதம் குறித்தும், ஆன்லைன்பிஜெ, TNTJ.NET
மற்றும் RiyadhTNTJ.com முதலியவற்றை சிறந்த முறையில் பார்வையிடும்
விதம் குறித்தும், தமிழ் தட்டச்சு முறைகள் குறித்தும்
விளக்கினார். மேலும், அலைபேசிகளை பயன்படுத்தி குறைந்த செலவில் தாயகத்திற்கு
பேசும் முறைகளும் விளக்கப்பட்டது.
இறுதி கட்டமாக, சகோ, அன்சாரி அவர்கள், "நிர்வாகிகள்
தவிர்க்க வேண்டியவை" குறித்து உரையாற்றினார்.
ஜும்ஆ
தொழுகைக்கு முன்பாக துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
No comments:
Post a Comment