ரியாத் மண்டல மர்கஸில் கடந்த 02.12.2011
வெள்ளியன்று இரவு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மண்டல
பேச்சாளர் சகோ. பஷீர் மவுலவி அவர்கள் “எதிலும் தேவை நிதானம்!” என்ற தலைப்பில்
குர்ஆன் – ஹதீஸ் ஒளியில் சிறப்புரை ஆற்றினார். நிதானம் தவறினால், மார்க்கமும் தவறி
விடும்; நீதமும் தவறி விடும் என்ற அடிப்படையில் சிறப்புரை
நிகழ்த்தப்பட்டது.
முன்னதாக மண்டல தர்பியா ஒருங்கிணைப்பாளர்
சகோ. சையது அலி ஃபைஜி அவர்கள் துவக்க உரையாற்றி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
நிகழ்ச்சியின் இறுதியில், மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள் மாநில-மண்டல
செயல்பாடுகளை விளக்கி, ஆஷூரா நோன்பு நாட்கள் குறித்தும், சவூதி அரேபியாவின் நிதாகத்
சட்டம் குறித்தும் அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதிக அளவில் மக்கள் கலந்து கொண்டு பயன்
பெற்றனர்.
No comments:
Post a Comment