ரியாத் மண்டல செயற்குழுக் கூட்டம் கடந்த 02.12.2011 வெள்ளியன்று
காலை 8.30 மணிக்கு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது. மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல்
தலைமை தாங்கினார். மண்டல வர்த்தக அணி செயலாளர் சகோ. முஹம்மது மாஹீன் அவர்கள்
மார்க்க விளக்க உரை நிகழ்த்தி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். “தியாக உணர்வுடன்
ஏகத்துவ பணியாற்றுதல்” என்ற தலைப்பில் ஆற்றிய உரை நிகழ்ச்சிக்கு பொருத்தமாக
அமைந்தது.
மண்டல செயலாளர் சகோ. அரசூர் ஃபாரூக் செயல்பாடுகளை விளக்கினார்.
மண்டல பொருளாளர் சகோ. ஃபரீத் கணக்கு விபரங்களை விளக்கினார். தர்பியா நிகழ்ச்சி
மற்றும் இன்ன பிற தஃவா பணிகள் ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.
அனைத்து அணிச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள், கிளை நிர்வாகிகள்,
செயற்குழு உறுப்பினர்களின் கருத்து பரிமாற்றத்திற்குப் பிறகு கூட்டம் துஆவுடன்
நிறைவுற்றது.
No comments:
Post a Comment