“இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்”– ரியாத் மண்டல (ஈதுல் அல்ஹா) பொது நிகழ்ச்சி
கடந்த ஹஜ் (ஈதுல் அல்ஹா) விடுறையை பயனுள்ள வகையில் கழிக்கும் விதமாக ரியாத் மணடலம் சார்பாக இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்ற பொது நிகழ்ச்சி கடந்த 05.10.2014 சனிக்கிழமையன்று அஸருக்குப் பிறகு பத்தாஹ்வில் அமைந்துள்ள ரமாத் ஹாலில் நடைபெற்றது. மாநில பொருளாளர் சகோ. M.I.சுலைமான் அவர்கள்,மார்க்கம் சம்பந்தமான மற்றும் ஜமாஅத் தொடர்பான கேள்விகளுககு அழகிய முறையில் பதிலுரைத்தார்கள். நிகழ்ச்சியை மண்டல துணைச் செயலாளர் சகோ. இர்ஷாத் அஹமது தொகுத்து வழங்கினார். இறுதியாக, மண்டல பொருளாளர் நூருல் அமீன் அவர்கள், அழைப்பை ஏற்று ஆர்வமுடன் வந்து கலந்து கொண்ட பொது மக்களுக்கும் மண்டல நிர்வாகிகளுக்கும், மண்டல, கிளை நிர்வாகிகளுக்கும், தொண்டர் அணியினருக்கும் ரியாத் மண்டலம் சார்பாக நன்றி கூறப்பட்டு இரவு 8.30 மணிக்கு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment