அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிரப் பிரச்சாரம் சிறப்பு செயல் வீரர்கள் கூட்டம்”– ரியாத் மண்டலம் - 24.10.2014

தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிரப் பிரச்சாரம் சிறப்பு செயல் வீரர்கள் கூட்டம்– ரியாத் மண்டலம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 24.10.2014 வெள்ளிக்கிழமை மஃக்ரிபுலிருந்து இஷா வரை ரியாத் மண்டல மர்கஸில் திவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிரப் பிரச்சாரத்தின் ஓர் அங்கமாக ரியாத் மண்டலத்தில் சிறப்பு  செயல் வீரர்கள் கூட்டம் மண்டல நிர்வாகிகள் முன்னிலையில் நடந்தது. கிளை நிர்வாகிகள், செயற் குழு உறுப்பினர்கள் மற்றும் தண்ணார்வ தொண்டர்கள் கலந்து கொண்ட இந்த அமர்வில் மண்டல பேச்சாளர் சகோ. சேக் தாவூது அவர்கள் இஸ்லாம் மனித நேயத்தை வலியுறுத்தும் மார்க்கம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மண்டலச் செயலாளர் சகோ. சோழபுரம் ஹாஜா ரியாத் மண்டலம் இதற்காக பல்வேறு சிறப்பு பயான்கள், குழு தஃவா, நோட்டீஸ் விநியோகம், பேனர் மற்றும் பேஜ்கள் மேலும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிகள் மூலம் பிற சமய மக்களுக்கு முஸ்லீம்கள் தீவிரவாதத்திற்கு எதிரானவர்கள், இஸ்லாம் தீவிரவாத்தை ஆதரிக்கவில்லை என்ற உண்மையை எடுத்துச் சென்று அவர்களின் மனதில் முஸ்லீம்களின் மீதும் இஸ்லாத்தின் மீதும் உள்ள  வெறுப்புணர்வை அல்லாஹ்வின் அருளாள் நீக்க வேண்டும் எனவும், அனைவரும் இந்த சந்தர்ப்பத்தை முறையாக பயண்டுத்தி நம் திட்டங்கள் நிறைவேற அயராது பாடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.  இதில் மாநிலப் பொருளாளர் சகோ. M.I. சுலைமான் அவர்கள் இது குறித்து பேசிய வீடியோ கிளிப் போடப்பட்டது, இது குறித்து விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டு கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் பேஜ்களும் அணியப்பட்டது எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.