“நிர்வாகக்குழு கூட்டுக்கூட்டம் ”– ரியாத் மண்டலம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 20.10.2014 திங்கள்கிழமை இரவு 0 8:15 மணிக்கு ரியாத் மண்டல TNTJ அலுவலகத்தில் மண்டல நிர்வாகக் கூட்டுக்குழு கூட்டம் மண்டல செயலாளர் சகோ. சோழபுரம் ஹாஜா தலைமையில் நடைபெற்றது. மண்டல துணைச் செயலாளர் சகோ. இர்ஷாத் அஹமது துவக்கவுரையாற்றினார். ரியாத் மண்டல நிர்வாகிகள் மற்றும் அணிச் செயலாளர்கள் கலந்து கொண்ட இந்த அமர்வில் முக்கியமாக "தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிர பிரச்சாரம்” இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் நவம்பர் 15 வரை தீவிரமாக பொது மக்கள் மற்றும் பிற சமய மக்களிடையே கொண்டு சென்று இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கும் மார்க்கம் இல்லை, முஸ்லீம்கள் தீவிரவாதத்திற்கு எதிரானவர்கள் என்பதை பிரச்சாரங்கள், நோட்டீஸ்கள், பேனர் மற்றும் இன்ன பிற மீடியாக்கள் மூலம் எத்தி வைத்து தஃவா செய்வது என ஆலோசிக்கப்பட்டது. மேலும் மண்டலம் மற்றும் கிளைகளில் தர்பியா மற்றும் ஆன்லைன் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு கூட்டம் இரவு 10.15 மணிக்கு நிறைவுற்றது.
No comments:
Post a Comment