அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

*அந்நூர் தவ்ஹீத் சகோதரர்கள் கூட்டமைப்பு கூட்டம்”*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு பெற்ற கல்வி நிறுவனமான கும்பகோணம் அந்நூர் இஸ்லாமியப் பெண்கள் கல்லூரியின்  அந்நூர் தவ்ஹீத் சகோதரர்கள் கூட்டமைப்பு –  மாதாந்திரக் கூட்டம் 14.08.2015 வெள்ளிக்கிழமை  அன்று மாலை மக்ரிப் தொழுகைக்கு பிறகு, ரியாத் TNTJ மர்கஸில், பொறுப்பாளர் சகோ.பரீத் தலைமையில் நடைபெற்றது.



கல்லூரி வளர்ச்சிக்கான செயல்திட்டங்களையும்,  கடந்த மாத செயல்பாடுகளையும் பொறுப்பாளர்கள் விளக்கினர். அதைத்தொடர்ந்து நமது கல்லூரி மாணவிகளுக்கு பாடத்திட்டங்களை நூல் வடிவத்தில் அச்சிட்டு கொடுக்கவிருக்கும் தகவல் பகிர்ந்துகொள்ளப்பட்டது. இந்த முயற்சியை வரவேற்பதுடன் நமது கூட்டமைப்பு சார்பாக இதற்கு உதவிசெய்ய முடிவானது. கல்லூரி மாணவிகள் அமர்ந்து படிக்க அனைவருக்கும் நாற்காலி வசதி ஏற்படுத்தித்தரவும் முடிவானது. கல்லூரியில் நோன்பு மாத விடுமுறையில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடைபெற்ற விபரம் வாசிக்கப்பட்டது. தணிக்கை செய்யப்பட்ட கணக்கு விபரங்களை பொறுப்பாளர் சகோ.கதிரை ஹாஜா சமர்ப்பித்தார். பொறுப்பு மாற்றம் நடைபெற்றது. வந்திருந்த சகோதரர்கள் கல்லூரியின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமான கருத்துக்களை பகிர்ந்துகொண்ட மனநிறைவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமை மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு கூட்டம் தொடர்ச்சியாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.