அந்நூர் தவ்ஹீத் சகோதரர்கள் கூட்டமைப்பு கூட்டம்” – ரியாத் மண்டலம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு பெற்ற கல்வி நிறுவனமான கும்பகோணம் அந்நூர் இஸ்லாமியப் பெண்கள் கல்லூரியின் வளர்ச்சிக்கான முதன்மை அமைப்பான, அந்நூர் தவ்ஹீத் சகோதரர்கள் கூட்டமைப்பு – சவூதி அரேபியாவின் மாதாந்திரக் கூட்டம் 12.06.2015 வெள்ளி அன்று மாலை மக்ரிப் தொழுகைக்கு பிறகு, ரியாத் TNTJ மர்கஸில், பொறுப்பாளர் சகோ.பரீத் தலைமையில் நடைபெற்றது.
கல்லூரி வளர்ச்சிக்கான செயல்திட்டங்களையும், கடந்த மாத செயல்பாடுகளையும் சகோ. சலாஹுதீன் விளக்கினார். கல்லூரி விடுமுறை முடிந்து புதிய கல்வியாண்டு துவங்கிய விபரமும் இந்த கல்வியாண்டில் கூட்டமைப்பு சார்பாக ஏழை மாணவிகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதற்கும் ஆவண செய்யப்பட்டது.
No comments:
Post a Comment