அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"இணைவைத்தலின் விபரீதங்கள்” - புத்தக வெளியீடு மற்றும் இலவச விநியோகம்,ரியாத் மண்டலம்

"இணைவைத்தலின் விபரீதங்கள் - புத்தக வெளியீடு மற்றும் இலவச விநியோகம்,ரியாத் மண்டலம்.

கடந்த வருடங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தாயீக்கள் எழுதிய புத்தகங்களை சவூதி ஜாலியாத் முலமாக பல்வேறு தலைப்புகளில் வெளியிடப்பட்டது. இதை சவூதியில் இருக்கும் நமது கிளைகள் சார்பாக தமிழ் பேசும் சகோதர்கள் மத்தியில் விநியோகம் செய்துவந்தோம். இது தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 

இந்த வருடம் புதிய தலைப்பு வெளியிடாத காரணத்தாலும் பழைய தலைப்புகள் போதிய அளவுக்கு இருப்பு இல்லாத காரணத்தாலும் , மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக, ரியாத் மண்டலத்தின் முதல் முயற்சியாக மண்டலம் சார்பாக ஒரு தலைப்பில் புத்தகம் வெளியிடலாம் என ஆலோசித்து அதன் அடிப்படையில் "இணைவைத்தலின் விபரீதங்கள்” என்ற தலைப்பில் புத்தகம் வெளியிடப்பட்டது. இதன் ஆக்கங்கள் யாவும் நமது அதிகாரப்புர்வமான வலைத்தளங்கள் மூலம் தொகுக்கப்பட்டு, மாநில மேற்பார்வையில் வெளியிடப்பட்டது.

நமது ஜமாத் சார்பாக நடைபெறயுள்ள ஷிர்க்கிற்கு எதிரான மாநாட்டை முன்னிட்டு முதல் கட்ட பிரச்சாரமாக இந்த தலைப்பை தேர்வு செய்யப்பட்டு, ரியாத் மண்டலம் மற்றும் சவூதியின் பிர மண்டலங்களிலும் சேர்த்து 6500 பிரதிகள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்லாஹ்வின் கிருபையால் மக்களிடத்தில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது .. அல்ஹம்துலில்லாஹ் ...


இதற்க்கான புகைப்படங்களையும் இணைத்துள்ளோம். மொத்த புத்தக விநியோகத்திற்கான புள்ளிகளை ரியாத் மண்டலத்திற்கு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 









ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.