“அழைப்பு பணியின் அவசியம்” – சித்தீன் கிளை (சஹ்ரான்புதிய கேம்ப்) உள்ளரங்கு நிகழ்ச்சி
அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் சித்தீன் கிளை நிர்வாகிகளின் சீரிய முயற்சியாலும் ரியாத் மண்டல நிர்வாகிகளின் ஆலோசணையின்படி மேலும் ஒரு புதிய கேம்ப் 13.03.2015வெள்ளிக்கிழமையன் இஷாவிற்கு பிறகு சஹ்ரான் ் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. சித்தீன் கிளைச் செயலாளர் சகோ. அப்பாஸ் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்ச்சியில் மண்டல பேச்சாளர் சகோ. தவ்ஃபீக், “அழைப்பு பணியின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அரும்பணிகள், அதன் நிலைபாடு மற்றும் பொறுப்பாளர்களிடம் இருக்க வேண்டிய பண்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு தொடர்ந்து பயான் நிகழ்ச்சிகள் நடத்திட திட்டமிடப்பட்டது. புகழ் அனைத்தும் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே.
No comments:
Post a Comment