அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் மண்டலத்தின் மாபெரும் தொடர் இரத்த தான முகாம் - 29.5.15

உம்ரா பயணிகளில் தேவை படுபவர்களுக்காக - ரியாத் மண்டலத்தின் தொடர் இரத்த தான முகாம்

இரத்தம் சிந்தி பொருளாதாரத்தை ஈட்ட சென்ற அயல் நாட்டில் பணிபுரிந்து கொண்டு தங்களது விடுமுறை நாட்களிலும் கூட மார்க்க பணியுடனுன் மனித நேய பணியையும் செய்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வளைகுடா மண்டலங்கள், தமிழக கிளைகள் மற்றும் மாவட்டங்களுக்கு நிகராக பிராமாண்ட இரத்த தான முகாம்களை நடத்தி ஆயிரக்கணக்காகன யூனிட் இரத்தத்தை கொடையாக வழங்கி வருகிறது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் மற்றும் கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி (KFMC)  மருத்துவமனை இணைந்து இந்த ஆண்டின் உம்ரா பயணிகளில் தேவை படுபவர்களுக்காக 34 வது மாபெரும் இரத்த தான முகாம் கடந்த 29-05-2015 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

முகாம் காலை 8.30 மணிக்கு துவங்கியது. விடுமுறை நாட்களையும் பொருட்படுத்தாமல், தன்னர்வ தொண்டர்கள் சாரை சாரையாக மருத்துவமமையில் குவிந்தார்கள். மருத்துவ ஊழியர்களின் சிரமத்தை குறைக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தன்னார்வ தொணடர்கள் இரத்த தான விருப்ப படிவம் நிரப்பி வழங்கினார்.
இந்த முகாமில் 245 பேர் பதிவு செய்தனர், உடல் தகுதி அடிப்படையில் 220 பேர் இரத்த கொடை அளித்தனர். இதில் தமிழ் பேசும் சகோதரர்கள் மட்டுமல்லாமல் நமது அண்டை மாநில சகோதரர்களும் கணிசமாக கலந்துக் கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்...
மருத்துவமனை இரத்த வங்கி பொறுப்பாளர் சகோ. சவுத் அல் அனாசி முகாமை பார்வையிட்டு தமிழ் பேசும் மக்களின் உயிர்காக்கும் இந்த மனித நேய பணியை வெகுவாக பாராட்டி தனது வாழ்த்துகளையும் நன்றியினையும் தெரிவித்து கொண்டார். மேலும், அவர் நிர்வாகிகளிடத்தில் பேசும் போது, இதுவரை இந்த மருத்துவமனையில் இந்த அளவுக்கு இரத்த தானம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் – ரியாத் மண்டலத்தை தவிர வேறு யாரும் நடத்தியதில்லை என்று தெரிவித்தார்.

ரியாத் மண்டல இரத்த தான ஒருங்கிணைப்பாளர் சகோ. முஜிபுர் ரஹ்மான் அவர்கள் கூறுகையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் – ரியாத் மண்டலம் சார்பாக இதுவரை 33 இரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடதக்கது என்றும் நமது இந்த மனித நோய பணியை பாராட்டி சவுதி சுகாதாரத்துறை சார்பாகவும், மருத்துவமனை சார்பாகவும் ஏராளமான விருதுகளும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கியுள்ளது. மேலும் மருத்துவமனையின் வேண்டுக்கோளுக்கு இணங்க, ஒரே நாளில் முகாம் நடத்திடாமல் இரண்டு வாரங்களாக நடத்திட திட்டமிட்டுள்ளோம் என்றும், இதனுடைய தொடர்ச்சி அடுத்த வாரம் 05.06.2015 அன்று நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

ரியாத் மண்டலத்தின் தலைவர் இர்ஷாத் அஹ்மது அவர்கள் இரத்த தானம் நடத்துவதின் நோக்கத்தை பற்றிகூறும் போது  திருக்குர்ஆன் 5 அத்தியாயம் 32 வசனம் ” யார் ஒரு மனிதரை வாழவைக்கிறாரோ அவர் உலக மக்கள் அனைவரையும் வாழ வைத்தவர் போலாவார்” என்ற இறை வசனத்தை நடைமுறைப்படுத்தி முஸ்லிம்கள் மனித நேயத்தை நேசிக்க்கூடியவர்கள் என்றும் ஆனால் இன்றைய மீடியாக்கள் முஸ்லிம்களை  தீவிரவாதிகள் என்று சித்தரித்து வருவதை களையவே எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இறைவனின் நற்கூலியை எதிர்பார்த்து இந்த  பணியை செய்து வருவதாக கூறினார். கடந்த 10 வருடங்களாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் – ரியாத் மண்டலம் வளைகுடா மண்டலங்களில் தொடர்ந்து முன்னணியில் உள்ளதாகவும், இதை பாராட்டி பல்வேறு விருதுகளை மருத்துவமனைகள் வழங்கியுள்ளன என்றார்.
இந்த முகாமின் அனைத்து ஏற்பாட்டினையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல மற்றும் கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர். 

குறிப்பு: இரத்ததான முகாமிற்கு முந்திய இரவு குடும்பத்துடன் இஸ்லாத்தை தழுவிய ஒரு குடும்பம், மறு நாள் குடும்பத்துடன் முகாமில் கலந்து கொண்டு குருதி கொடையளித்தார்.

… எல்லா புகழும் இறைவனுக்கே ....


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.