அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

சமுதாய பணி - ரியாத் மண்டலம் - 3.6.15

சமுதாய பணி  - ரியாத் மண்டலம்.

புளியங்குடியைச் சேர்ந்த சகோதரர் இஸ்மாயில் - முன்னாள் கிளை தலைவர் & மாவட்ட பேச்சாளர் கடந்த 2 வாரங்களுக்கு முன் ரியாத் நகரத்திற்கு வந்தார். வேலைக்கு வந்த இடத்தில் கூடுதல் மற்றும் நீண்ட நேரம் வேலை உள்ளதால், மாற்று வேலைக்கு முயர்ச்சி செய்து கொண்டு இருந்த நிலையில், அவரின் மோலாளருக்கும் இவருக்கும் இருந்த கருத்து வேறுபாடுகள் காரணமாக, இவரை தாக்கியுள்ளார். இந்த தகவல் கிளை நிர்வாகிகளின் கவனத்திற்கு வர, மண்டல நிர்வாகத்தின் ஆலோசனையின் படி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு முதலுதவி வழங்கி அருகிலுள்ள காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மண்டல நிர்வாகிகள், கிளை நிர்வாகிகளுடன் அன்று மாலை சகோ. இஸ்மாயில் அவர்களை சந்தித்து அறுதல் வழங்கி, அவர் தாயகம் திரும்ப விரும்புவதால், மண்டல நிர்வாகிகள் அவரின் நிறுவனத்தை தொடர்பு கொண்டு அவரை தாயகம் திருப்பி அனுப்ப வேண்டுக்கேள் விடுத்தனர். இறுதியாக மண்டல நிர்வாகத்தின் வேண்டுக்கேளுக்கு இனங்க தாயகம் திருப்பி அனுப்ப ஏற்றுக் கொண்டார். இதன்படி கடந்த செவ்வாய் இரவு சகோ. இஸ்மாயில் பத்திரமாக தாயகம் திரும்பினார். அவரின் பயணத்திற்கு உழைத்த கிளை மற்றும் மண்டல நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார் ... அல்ஹம்துலில்லாஹ் ...


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.