"இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" - ரியாத் மண்டலம்
ரியாத்
மண்டலத்தின் சார்பாக மாதம் தோறும் இங்கு வாழும் தமிழ் நாட்டை
சார்ந்த குடும்பத்தினர்களுக்காக இஸ்திராஹ் நிகழ்ச்சி நடத்தி வருகின்றோம்.
இந்த மார்ச் மாத நிகழ்ச்சிக்காக மாநில மேலாண்மை குழு உறுப்பினர் சகோ.
பஃக்கிர் முஹம்மது அல்தாபி அவர்களை வரவழைத்து 27-03-2015 வெள்ளிக்கிழமை
மாலை 4.00 மணி முதல் இரவு 7.30 வரை "இஸ்லாம்
ஓர் எளிய மார்க்கம்" என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 293
பெரியவர்கள் மற்றும் 34 சிறுவர் சிறுமியர் கலந்து கொண்டனர். மொத்தம் 26
கேள்விகள் கேட்கப்பட்டது, குறிப்பாக ஜகாத் மற்றும் சூனியம் சம்பந்தமான
கேள்விகளிக்கு தெளிவான பதில்கள் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லா ஹ் இந்நிகழ்ச்சியில் கலந்து
கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் மக்கள்
இந்நிகழ்ச்சி மிக்க பயனுள்ளதாக இருந்ததாகவும் இன்னும் கூடுதல் நேரம் ஒதுக்க
வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருந்தனர்.
No comments:
Post a Comment