“இறையச்சம்”– ஆன்லைன் நிகழ்ச்சி நியூசெனைய்யா (GCC) கிளை தஃவா
அல்லாஹ்வின் மாபெரும்
கிருபையால் நியூசெனையா கிளை GCC வில்லா
தொழுகைப் பள்ளியில் 04.09.2014
வியாழனன்று இரவு 8:30 மணிக்கு கிளைத் தலைவர்
சகோ. நூர் முஹம்மது தலைமையில் ஆன்லைன் தஃவா ஏற்பாடு செய்யப்பட்டது. மாநில பேச்சாளர் சகோதரர்
அப்துல் கரீம், “இறையச்சம்” என்ற தலைப்பில் ஆன்லைனில் Skype வாயிலாக
உரையாற்றினார். இந்நிகழ்ச்சியை புரொஜெக்டர்
மூலம் ரியாத் மண்டலம் ஏற்பாடு செய்து ஒளிபரப்புச் செய்தது. அதைத் தொடர்ந்து மண்டல துணைச்
செயலாளர் சகோ. இர்ஷாத் அஹமது “செப்டம்பர் 19ம் தேதி
நடக்கவிருக்கும் 32வது மெகா இரத்ததான முகாம் குறித்தும், மீஞ்சூர் அர்ரஹீம் முதியோர்
ஆதரவற்ற இல்லம் கட்டுமானப் பணிகள் குறித்தும் எடுத்துரைத்து நிகழ்ச்சியை இரவு 10
மணிக்கு நிறைவு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment