அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

இந்தியன் எம்பஸி சார்ந்த சமுதாய பணி - ரியாத் மண்டலம் - 23.4.15

சமுதாய பணி  - ரியாத் மண்டலம்.

ஜித்தாஹ் மண்டலம் கேட்டுக்கொண்ட அடிப்படையில், சவூதி சக்காகா பகுதியில் வாழ்ந்த ஜஹபர் சித்திக் சுல்தான் என்பவர் 23-4-2015 அன்று வாகன விபத்தில் மரணமடைந்தார். இவர் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சார்ந்தவர். இவரது மைத்துனர் சகோ. அமீர் அவர்கள் ரியாதிற்கு வருகை தந்து, இவருக்கு ரியாதில் உள்ள இந்தியன் எம்பஸி மூலம் மருத்துவமனைக்கு, காவல் துறைக்கு மற்றும் சவூதியில் நல்லடக்கம் செய்ய NOC கடிதங்கள் தேவைப்பட்டன. 

தேவையான documents இவர் கொண்டு வராத காரணத்தினாலும் வெள்ளி மற்றும் சனி விடுமுறை நாட்களானதால், ரியாதிலிருந்து சகாகா சுமார் 900 கிலோமீட்டர் தொலைவாக உள்ளதால் இவரை ரியாத் மண்டலத்தின் சார்பாக தங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து ஞாயிறு காலை அலுவலக முதல் நேரத்திலேயே தேவையான NOC கடிதங்களும் பெற்றுக் கொடுக்கப்பட்டன. 

சகோ. அமீர் அவர்கள் TNTJ ஜமாஅதிற்கும் ரியாத் மண்டல நிர்வாகத்திற்கும் மிகுந்த நன்றியை தெரிவித்து கொண்டார்.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.