அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

அந்நூர் தவ்ஹீத் சகோதரர்கள் கூட்டமைப்பு கூட்டம் – ரியாத் மண்டலம் - 8.5.15

அந்நூர் தவ்ஹீத் சகோதரர்கள் கூட்டமைப்பு கூட்டம்  ரியாத் மண்டலம்
 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு பெற்ற கல்வி நிறுவனமான கும்பகோணம் அந்நூர் இஸ்லாமியப் பெண்கள் கல்லூரியின் வளர்ச்சிக்கான முதன்மை அமைப்பானஅந்நூர் தவ்ஹீத் சகோதரர்கள் கூட்டமைப்பு  சவூதி அரேபியாவின் மாதாந்திரக் கூட்டம் 08.05.2015 வெள்ளி அன்று மாலை மக்ரிப் தொழுகைக்கு பிறகு, ரியாத் TNTJ மர்கஸில், பொறுப்பாளர் சகோ.பரீத் தலைமையில் நடைபெற்றது. 
கல்லூரி வளர்ச்சிக்கான செயல்திட்டங்களையும்,  கடந்த மாத செயல்பாடுகளையும் சகோ. சலாஹுதீன் விளக்கினார். கல்லூரி ஆண்டுத் தேர்வுகள் முடிவடைந்த விபரமும்மே ஆம் தேதி முதல் கோடைகால பயிற்சி முகாம் நடைபெற உள்ள தகவலும்அறிவிக்கப்படது.
மேலும் வரும் 24-05-2015 அன்று நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. கல்லூரியில் சேர விரும்பும் மாணவிகள் இந்த தேர்வில் கலந்துகொள்ளவும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது. தணிக்கை செய்யப்பட்ட கணக்கு விபரங்களை சகோ. கதிரை ஹாஜா  சமர்ப்பித்தார்.ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமை மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு கூட்டம் தொடர்ச்சியாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.