“குழு தஃவா”– ரியாத் மண்டலம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 05.08.2014 அன்று அஜீஸியா பகுதியில் கடையில் பணிபுரியும் ராஜ
மண்ணார்குடி சகோதரர் ஒருவருக்கு மண்டல
நிர்வாகிகள் தஃவா செய்தனர். இவர் இந்து மதத்திலிருந்து நான்கு மாதத்திற்கு முன்பு தான்
அசோக் என்ற பெயரிலிருந்து முஹம்மது என்ற பெயரில் இஸ்லாம் திரும்பியுள்ளார் அல்ஹம்துலில்லாஹ்.
தான் வேலை செய்யும் முதலாளி (அரபியுடைய) சொல்லுக்காக சகோ.
முஹம்மது இஸ்லாத்தை ஏற்றிருந்தாலும், கடந்த ஒரு மாதமாக இஸ்லாம் குறித்து அதிகம்
நாட்டம் கொண்டு அதைப் பற்றி கூடுதலாக அறிய வேண்டும் என்றும் தன் பெற்றோர்களையும்
இந்த சத்திய இஸ்லாத்தின் பால் கொண்டு வரவேண்டும் என்ற ஆவலும் உள்ளதாக ரியாத் மண்டல
நிர்வாகிகளிடம் கூறியுள்ளார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ரியாத் மண்டலம்
சார்பாக செய்வதுடன் இன்ஷா அல்லாஹ் இந்தச் சகோதரரது பெற்றோரும் சத்தியக் கொள்கையில்
வர அனைவரும் துவாச் செய்வோம்..
No comments:
Post a Comment