“அழைப்பு பணியின் அவசியம்” – நஸீம் கிளை (சுலை பகுதியில்புதிய கேம்ப் ) உள்ளரங்கு நிகழ்ச்சி
அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையாலும் நஸீம் கிளையின் சீரிய முயற்சியாலும் ரியாத் மண்டல நிர்வாகிகளின் ஆலோசனையின்படி சுலை பகுதியில் மேலும் ஒரு புதிய கேம்ப் 01.01.2015 வியாழனன்று இரவு 9 மணிக்குப் பிறகு உருவாக்கப்பட்டது. நஸீம் கிளை செயலாளர் சகோ. அஷ்ரஃப் துவக்கவுரையுடன் ஆரம்ப்பிக்கப்பட்ட இந்த அமர்வில் மண்டல பேச்சாளர் சகோ உபைதுல்லாஹ் மவுளவி, “அழைப்பு பணியின் அவசியம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அரும்பணிகள், அதன் நிலைபாடு மற்றும் பொறுப்பாளர்களிடம் இருக்க வேண்டிய பண்புகள் குறித்து மண்டல செயலாளர் சகோ. சோழபுரம் ஹாஜா எடுத்துரைத்தார். இதி்ல் மண்டல மற்றும் நஸீம் கிளை நிர்வாகிகளும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மேலும் கிளை சார்பாக அன்பு மனைவியின் அழகிய அணுகுமுறை "என்ற நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. புகழ் அனைத்தும் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே.
No comments:
Post a Comment