“இஸ்லாத்தின் பார்வையில் செல்வம்” அஜீஸியா கிளை (மங்களக்குடி சகோதரர்கள் வில்லா புதிய கேம்ப்) உள்ளரங்கு நிகழ்ச்சி
அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் அஜீஸியா கிளையின் தொடர் முயற்சியாலும் ரியாத் மண்டல நிர்வாகிகளின் ஆலோசனையின்படி பத்தாஹ் பகுதியில் அமைந்துள்ள மங்களக்குடி சகோதரர்கள் வில்லாவில் புதிய கேம்ப் 02.01.2015 வெள்ளிக்கிழமை ஜும்மாவிற்கு பிறகு உருவாக்கப்பட்டது. அஜீஸியா கிளை பொருளாளர் சகோ. அப்துல் பாரி துவக்கவுரையுடன் ஆரம்ப்பிக்கப்பட்ட இந்த அமர்வில் மண்டல பேச்சாளர் சகோ முஹம்மது அமீன் “இஸ்லாத்தின் பார்வையில் செல்வம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அரும்பணிகள்,அதன் நிலைபாடு மற்றும் பொறுப்பாளர்களிடம் இருக்க வேண்டிய பண்புகள் குறித்து மண்டல பொருளாளர் சகோ. நூருல் அமீன் எடுத்துரைத்தார். இதி்ல் மண்டல நிர்வாகிகள் மற்றும் அஜீஸியா கிளை நிர்வாகிகளும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். புகழ் அனைத்தும் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே.
No comments:
Post a Comment